பதிவு செய்த நாள்
11
பிப்
2015
11:02
விருத்தாசலம்: செல்லியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விமான அலகு அணிந்து, கிரேனில்தொங்கியபடி ஊர்வலமாக சென்றுநேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரை செல்லியம்மன் (எ) வடபத்திர காளியம்மன் கோவில் செடல் திருவிழா, கடந்த 3ம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. செடல் உற்சவத்தையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு மணிமுக்தாற்றிலிருந்து பக்தர்கள் சக்தி கரகம், தீச்சட்டி ஏந்தி, 300 பால்குடம் சுமந்து, பரமசிவன், பார்வதி, முருகன்,காளியம்மன், வீரன் வேடமணிந்து ஊர்வலமாகச் சென்றனர்.
தொடர்ந்து, மூன்று கிரேன்களில் ஏராளமான பக்தர்கள் விமான அலகு அணிந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 3:30மணிக்கு மேல் விருத்தகிரீஸ்வரர் கோவிலிலிருந்து அலங்கரித்த திருத்தேரில் செல்லியம்மன் வீதியுலா நடந்தது. ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.இன்று(11ம் தேதி)மஞ்சள்நீர் உற்சவம், 13ம்தேதி திருவிளக்கு பூஜையுடன்விழா நிறைவடைகிறது.
போக்குவரத்து பாதிப்பு: பக்தர்கள் ஊர்வலத்தின் போது, கடை வீதி, பாலக்கரை, ஜங்ஷன் ரோடு, கடலூர் ரோடு ஆகிய பகுதிகளில்பகல் 12:00 முதல் பிற்பகல் 2:30 மணி வரை போக்குவரத்து பாதித்தது.