பதிவு செய்த நாள்
11
பிப்
2015
12:02
கருமத்தம்பட்டி : கோதபாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கருமத்தம்பட்டி அடுத்த கோதபாளையம் மாகாளியம்மன் கோவில் பழமை வாய்ந்தது. இங்கு சில மாதங்களாக விமானத்துக்கு வர்ணம் தீட்டுதல், முன் மண்டபம் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. ஆறாம் தேதி காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 8:00 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பெண்கள் காசி தீர்த்தம் எடுத்து வந்தனர்.தொடர்ந்து, 7ம்தேதி மாலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி மற்றும் முதற்கால யாகம் நடந்தது. 8ம் தேதி இரண்டு, மூன்றாம் கால யாக பூஜையும், விமான கலசமும் வைக்கப்பட்டது.
நேற்றுமுன் தினம் காலை, நான்காம் கால யாக பூஜை முடிந்து, பூஜிக்கப்பட்ட கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 9:15 மணிக்கு அரசமரத்து விநாயகர் மற்றும்
விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் மற்றும் மகா அபிஷேகம் நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது.முன்னதாக பட்டிமன்றம், பரதநாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் குத்து விளக்கு பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.