பதிவு செய்த நாள்
11
பிப்
2015
12:02
உடுமலை : முரளீதர சுவாமிஜியின் உடுமலை நாம கேந்திரா (காட் அமைப்பு) சார்பில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி உடுமலையில் நாளையும், நாளை மறுதினமும் நடக்கிறது.
காட் அமைப்பின் உடுமலை நிர்வாகி பிரமிளா கூறியதாவது: முரளீதர சுவாமிஜியின் உடுமலை நாம கேந்திரா பல்வேறு ஆன்மிக சேவைகளை செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தப்படுகிறது. உடுமலை, வ.உ.சி., வீதியில் உள்ள ராமய்யர் திருமணமண்டபத்தில், நாளையும் (பிப்., 12), நாளை மறுதினமும் (பிப்.,13) பாகவத தர்மம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது; முரளீதர சுவாமிஜியின் சீடர் ராமானுஜம் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கும், இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில், ஹரே ராம மகாமந்திர நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.