பதிவு செய்த நாள்
11
பிப்
2015
12:02
அவிநாசி : திருமுருகன்பூண்டி கோவில் தேர்த்திருவிழா, 26ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
வரும் 27ல் சூரிய, சந்திர மண்டல காட்சி, 28ல் பூத வாகனம், சிம்ம வாகன காட்சி, மார்ச் 1ல் புஷ்ப விமான காட்சி நடைபெறுகிறது. 2ல் ரிஷப வாகனத்தில் திருமுருகநாத சுவாமி, காமதேனு வாகனத்தில் அம்பிகை, மயில் வாகனத்தில் சண்முகநாதர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 3ம் தேதி இரவு, திருக்கல்யாண உற்சவம், யானை, அன்ன வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.மார்ச் 4 அதிகாலை 5:30க்கு மக நட்சத்திரத்தில், விநாயக பெருமான், திருமுருகநாதர், சண்முகநாதர் தேர்களில் எழுந்தருளி, அருள்பாலிக்கின்றனர். அன்று மாலை 3:00க்கும், மறுநாளும் தேரோட்டம் நடைபெறும்.
மார்ச் 6 மாலை 6:30க்கு பரிவேட்டை, குதிரை, சிம்ம வாகன காட்சி, இரவு 7:00க்கு தெப்பத்தேர்
உற்சவம் நடைபெறும். 7ல் சுந்தரமூர்த்தி நாயனார் பெருமான் வேடுபறி வைபவம், 8ல் ஆடல்
வல்லானின் பிரம்ம தாண்டவ தரிசன காட்சியும் நடக்கிறது. வரும் 9ல் விழா நிறைவடைகிறது.