பதிவு செய்த நாள்
11
பிப்
2015
12:02
புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள, அங்காளபரமேஸ்வரி கோவிலில், சிவராத்திரி பூஜையுடன் பிரம்மோற்சவ விழா துவங்குகிறது.
வரும் 17ம் தேதியன்று காலை, விநாயகர் பூஜை, மாலை 5 மணிக்கு, சக்தி கரகம், இரவு 7 மணிக்கு, துவஜாரோகணம், சிவராத்திரி பூஜையுடன் விழா துவங்குகிறது. விழாவில் தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதி உலா, மார்ச் 3ம் தேதி வரை நடக்கிறது. பூத வாகனம், ரிஷப வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம் என பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. வரும் 23ம் தேதி மாலை 6 மணிக்கு, நரிமேடு மயானத்தில்மயானக்கொள்ளையும், மார்ச் 4ம்தேதி இரவு 8 மணிக்கு, வேதபுரீஸ்வரர் கோவிலில் தொப்போற்சவமும், 5ம் தேதியன்று, மாசி மகம் கடல் தீர்த்தவாரியும், 6ம் தேதியன்று, ஊஞ்சல் உற்சவமும், 7ம் தேதி அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 8ம் தேதி, மஞ்சள் நீர் நிகழ்ச்சியும், 9ம் தேதி, பாவாடைராய சுவாமி பள்ளயம் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார், நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் ஆகியோர் செய்துள்ளனர்.