பதிவு செய்த நாள்
11
பிப்
2015
12:02
திருவண்ணாமலை : வந்தவாசி, ஜலகண்டேஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில் தேர்களுக்கு, புதியதாக செய்யப்பட்ட இரும்பு சக்கரம், நேற்று முன்தினம் மாலை வீதி உலா வந்தது.
வந்தவாசியில், பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவில்களுக்கு, இரண்டு தேர்கள் உள்ளது. பழமை வாய்ந்த கலை நயம் மிக்க இரண்டு தேர்களும் மிகவும் பழுதடைந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருந்தது.
பழுதடைந்த நிலையில் உள்ள, இரண்டு தேர்களின் மரச்சக்கரங்களை அகற்றி விட்டு, இரும்பு
சக்கரங்களை பொருத்த, திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர். பக்தர்கள், பொதுமக்கள் வழங்கிய காணிக்கையில், 4லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிதாக, இரண்டு இரும்பு சக்கரங்கள் வாங்கப்பட்டது.தேர் திருப்பணிக்குழுவை சேர்ந்த பானுகோபன், நாராயணன், செல்வராஜ், திலீப் முரளி, பெருமாள் கோவில் பட்டாச்சாரியார், ஜலகண்டேஸ்வரர் கோவில் அர்ச்சகர் கார்த்திகேய சிவம், கான்ட்ராக்டர் ஆறுமுகம் மற்றும் பலர் இரும்பு சக்கரங்களை வரவேற்று பூஜைகள் செய்தனர்.பின்னர், இவற்றை லாரியில் வைத்தவாறு மேளதாளத்துடன் காந்தி சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட், குளத்துமேடு பாலுடையார் வீதி, சன்னதி தெரு, தேரடி வழியாக வீதி உலா கொண்டு செல்லப்பட்டு மீண்டும், கோவில் வளாகத்துக்கு வந்தது.