பதிவு செய்த நாள்
11
பிப்
2015
12:02
ராசிபுரம் : மஹா சிவராத்திரி விழா, வரும், 17ம் தேதி ராசிபுரம், கைலாசநாதர் கோவிலில் நடக்கிறது.
ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், மாசி சிவராத்திரி விழாவை முன்னிட்டு, வரும், 17ம் தேதி
பாலதண்டாயுதபாணி பக்தர்கள் குழு சார்பில், 34ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா நடக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு பஞ்ச கலசபூஜை, பஞ்சகவ்ய பூஜை, வேதபாராயணம், தொடர்ந்து இரவு, 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, கோபூஜையும் நடக்கிறது.வரும், 18ம் தேதி காலை சூரியோதய அபிஷேக ஆராதனை, சண்டிகேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, ஸ்வாமி நகரின் ராஜவீதி வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான, ஏற்பாடுகளை பாலதண்டாயுதபாணி பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.