பதிவு செய்த நாள்
11
பிப்
2015
12:02
மப்பேடு: மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில், ஏழாம் ஆண்டு பிரம்மோற்சவம், வரும் 13ம் தேதி,
கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ளது மப்பேடு ஊராட்சி. இங்குள்ள புஷ்பகுஜாம்பாள் உடனுறை சிங்கீஸ்வரர் கோவிலில், ஏழாம் ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கடந்த 2ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சி நடந்தது. பின், நேற்று காலை, கிராம தேவதை வழிபாடு நடந்தது. பின், நாளை காலை, விநாயகர் உற்சவம் நடக்கிறது. அதை தொடர்ந்து, நாளை மறுநாள், காலை 8:30 மணி முதல், 9:30 மணிக்குள், கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்குகிறது. தொடர்ந்து, 11 நாட்கள்பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
நாள் நேரம் நிகழ்ச்சி
பிப்., 12 காலை விநாயகர் உற்சவம்
பிப்., 13 காலை கொடியேற்றம்
மாலை சந்திர பிரபை
பிப்., 14 காலை சந்திரசேகர் கேடய உற்வசம்
மாலை சோமாஸ்கந்தர் பூத வாகனம்
பிப்., 15 காலை கேடய உற்வசம்
மாலை அதிகார நந்தி சோமாஸ்கந்தர்
பிப்., 16 காலை சந்திர சேகர் ேகடய உற்வசம்
மாலை நாக வாகனம்
பிப்., 17 காலை அதிகார நந்தி பஞ்சமூர்த்தி
மாலை ரிஷப வாகனம் பஞ்சமூர்த்தி
பிப்., 18 காலை கேடய உற்சவம்
மாலை யானை வாகனம்
பிப்., 19 காலை தேரோட்டம்
மாலை ராவண வாகனம்
பிப்., 20 காலை கேடய உற்சவம்
மாலை திருக்கல்யாணம்
பிப்., 21 காலை கேடய உற்வசம்
மாலை புஷ்ப பல்லாக்கு அபிஷேகம்
இரவு நடராஜர் அபிஷேகம்
பிப்., 22 காலை வள்ளூவ தரிசனம்,
நடராஜர் உற்வசம்
மாலை ரிஷப வாகன உற்வசம்,
கொடி இறங்குதல்:
பிப்., 23 மாலை பந்தமரி உற்சவம்
பிப்., 24 மாலை விடையாற்றி உற்சவம்.