தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, மாலையில் ஆறுகால பூஜைகள் நடந்தது. பைரவருக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. கிருஷ்ணசைதன்யதாஸ் ஹரேராம நாம சங்கீர்த்தனம், கூட்டு பிரார்த்தனை மற்றும் சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய பைரவருக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் அபிஷேக பால் வழங்கி சுவாமி தரிசனம் செய்தனர். திருமஞ்சன பிரசாதம் வழங்கப்ட்டது.