சிதம்பரம்: சிதம்பரத்தில் நேற்று நடந்த இளமையாக்கினார் கோவில் தல வரலாற்று உற்சவம் விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த னர். இளமையாக்கினார் கோவில் திருத்தல வரலாற்று உற்சவம் விழா கடந்த 10ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடந்தது. இதனையொட்டி சுவா மிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. முதல் நாள் உற்சவத்தில் யௌவனாம்பாள் சமேத யௌவனேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. பின்னர் கிழக்கு கோபுரம் முன்பு யௌவனேஸ்வரர் சுவாமி சிவ பெருமான் சிவயோகியார் வடிவத்தில் எழுந்தருளி திருநீலகண்ட நாயனாருக்கு திருவோடு கொடுத்தல் உற்சவம் நடந்தது. அப்போது பக்தர்கள் புரா ணம் வாசித்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று, திருநீலக்கண்டர் தீர்த்தக் குளத்தில் குளித்து எழுந்த போது இளமையான தல வரலாற்று உற்சவம் நடந்தது. இதனையொட்டி யௌவனாம்பாள் சமேத யௌவனேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் வீதியுலா நடந்தது. பின்னர் மதியம் 2:00 மணிக்கு கோவில் தீர்த்த குளக்கரையில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது திருநீலகண்ட நாயனார் குளத்தில் இறங்கி சி றப்பு பூஜைகள் செய்து தண்ணீரில் நீராடி எழும் ஐதீகம் நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அதே குளத்தில் குளித்து எழுந்தனர். பின்னர் சுவா மிக்கு தீர்த்தவாரி, சிறப்பு தீபாராதனை நடந்து, பக்தர்கள் புராணம் வாசித்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி யுலா நடந்தது.