பதிவு செய்த நாள்
12
பிப்
2015
10:02
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் பிரசாத கடையை, உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார். சிதம்பரம் நடராஜர் கோவிலில், பொது தீட் சிதர்கள் மூலம் நடத்தப்படும் பிரசாத கடையில் விற்கப்படும் உணவு பொருட்கள் தரமானதாக இல்லை என, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் சென்றது. கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா மற்றும் உணவு ஆய்வாளர் குழுவினர், நடராஜர் கோவில் பிரசாத ஸ்டாலில் ÷ நற்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, உணவுப் பொருள்கள் திறந்து வைக்கப்பட்டிருந்ததையும், முருக்கு தரமற்றதாக இருப்பதையும் சுட்டிக்காட் டினர். பொது தீட்சிதர் செயலர் பாஸ்கர தீட்சிதர், சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்தது, அப்படித்தான் இருக்கும் என்றார். உணவுப் பொருள்கள் ஈ, கொசுக்கள் மொய்க்காமல் இருக்க கண்ணாடி ஸ்டால் அமைக்க வேண்டும். பொருள்கள் தரமானதாக இருக்க வேண்டும். ஸ்டாலில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது. பிரசாத ஸ்டால் வியாபார ரீதியாக இருப்பதால், உணவுப் பொருள் சட்டத்தின் கீழ் லைசன்ஸ் பெற வேண்டும் என எச் சரித்தனர். கோவில் மடப்பள்ளியை ஆய்வு செய்ய வேண்டும் என கூறியபோது, கோவில் நடை சாத்தப்பட்டதால் மடப்பள்ளியையும் மூடி விட்÷ டாம். திறக்க கூடாது என தீட்சிதர்கள் கூறினர். நாளை (இன்று) பார்வையிடலாமா என அதிகாரிகள் கேட்டதற்கு, இரண்டு நாட்களுக்கு உற்சவம் இ ருக்கிறது. அதன் பிறகு வாருங்கள் பார்க்கலாம் என தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அடுத்த முறை மடப்பள் ளியை ஆய்வு செய்யும்போது சுகாதாரமாக இல்லாவிட்டால் பூட்டி சீல் வைத்து விடுவோம் என எச்சரித்துச் சென்றனர்.