பதிவு செய்த நாள்
12
பிப்
2015
11:02
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டத்திற்கு தேர் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ÷ காவில் மாசி மக பிரம்மோற்சவம் வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதில், 6ம் நாள் உற்சவமாக விருத்தகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் விபச்சித்து முனிவருக்கு காட்சியளித்தல், மார்ச் 3ம் தேதி தேரோட்டம், 4ம் தேதி மாசிமகம், 5ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. தேரோட்டத்தன்று விநாயகர், முருகன், விருத்தகிரீஸ்வரர், தாயார், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் அலங்கரித்த 5 தேர்களில் வீதியுலா வந்து அருள்பாலி ப்பது வழக்கம். இந்நிலையில், தேர்களில் உள்ள சட்டங்கள், சீலைகள் பழுதாகின. அதைத் தொடர்ந்து, 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தேர் சட் டங்களும், 7 லட்சம் ரூபாயில் தேர் சீலைகளும் புதிதாக பொருத்தப்பட உள்ளன. தேர் சீரமைப்புப் பணிக்கு துõத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியிலிருந்து பனை மரச் சட்டங்கள் கடந்த மாதம் வந்திறங்கின. அவற்றைக் கொண்டு, தேர்கள் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.
மீண்டும் ஆக்கிரமிப்பு: தேரோட்டத்தை முன்னிட்டு, கடந்த 6ம் தேதி தேரடியில் ஆக்கிரமிப்பு செய்திருந்த பழம், காய்கறி, மளிகை, வாழை இலை, பங்க், பேன்சி கடைகள் அகற்றப்பட்டன. ஓரிரு நாட்களில் அதே இடத்தை ஆக்கிரமித்து மீண்டும் தற்காலிக கடைகள் முளைத்துள்ளன. மேலும், ஆட்டோ, வேன், இருகர வாகனங்கள் தேரடியில் நிறுத்துவதால் தேர் சீரமைக்கும் பணி பாதிப்பதுடன், பக்தர்களும் சிரமம் அடைகின்றனர்.