பதிவு செய்த நாள்
12
பிப்
2015
11:02
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அடுத்த மாங்குளத்தில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர், முருகன், வரதராஜ பெருமாள், மகா மாரியம்மன், பெரிய நாயகி, க ருப்பண்ணார் கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் முதல் கால பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், 2ம் கால பூஜை, 7:00 மணிக்கு கோ பூஜை, அக்னி பிரவேசம், வேள்வி பூஜை நடந்தது. காலை 10:00 மணியளவில் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.