பதிவு செய்த நாள்
12
பிப்
2015
11:02
கடலூர்: கடலூர், வண்டிப்பாளையம் ரோடு அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கிய து. கடலூர், வண்டிப்பாளையம் ரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் வரும் 18ம் தேதி மயானக் கொள்ளை உற்சவம் நடக்கிறது. அதற் கான விழா நேற்று காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில், கோவில் தக்கார் நாகராஜன், கவுன்சிலர் ராமச்சந்திரன், குப்பு ராஜ், மணி, ராஜேந்திரன், சிவலோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு அம்மன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், இரவில் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. வரும் 16ம் தேதி மாலை திருக்கல்யாணம் மற் றும் பாரிவேட்டை உற்சவம் நடக்கிறது. 17ம் தேதி மதியம் அம்மன் குறத்தி வேடம் பூண்டு மயானம் சென்று வல்லாளக்கண்டன் காட்டை அழித்தலு ம், இரவு வீதியுலாவும், 18ம் தேதி மதியம் பூத வாகனத்தில் மயானம் சென்று மயானக் கொள்ளை உற்சவம் நடக்கிறது. 19ம் தேதி விடையாற்றி உற்ச வமும், 20ம் தேதி கும்பம் படைத்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.