நெய்வேலி: நெய்வேலி சங்கீத சபா, ராமகிருஷ்ண சேவா சங்கம் மற்றும் கன்னட சங்கம் சார்பில், புரந்தரதாசர் ஆராதனை இசை விழா நடந்தது. வட்டம் 18ல் உள்ள ராமகிருஷ்ண சேவா சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, என்.எல்.சி., மக்கள் தொடர்புத் துறை பொது மேலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ரகுநாதன் முன்னிலை வகித்தார். கன்னட சங்கத் தலைமை நிர்வாகி ரவி வரவேற்றார். நெய்வேலியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்களின் பாட்டுப் போட்டி நடந்தது. தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் அரங்கத்தில் வயலின் வித்வான் பார்த்தசாரதி, மிருதங்க வித்தவான் தஞ்சாவூர் ராமச்சந்திரன், பிரபா சுந்தரேசன் மற்றும் மைசூர் சகோதரிகள் பத்மா கணபதி, ஷைலஜா நாகேஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பாட் டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.