ஆனைமலை: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று கோபால்சாமி மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள காலசம்ஹார பைரவ மூர்த்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆனைமலை அருகே, அங்கலக்குறிச்சி கோபால்சாமி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கால சம்ஹார மூர்த்தி பைரவர் கோவில். அங்கு, நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பைரவர் மூர்த்திக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. தேய்பிறையில் வரக்கூடிய அஷ்டமி திதி பைரவருக்கு உகந்தது. இந்த தினத்தில் பைரவருக்கு பால் சந்தனம், இளநீர், திருமஞ்சனம், தேன் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிேஷகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. காலை 11.30 மணிக்கு நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் வெண் பூசணியில் விளக்கேற்றி வழிப்பட்டனர். மாலை 4.30 மணிக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டனர். மகா அபிேஷகம் முடிந்த பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.