பதிவு செய்த நாள்
12
பிப்
2015
11:02
புதுச்சேரி: பெரியார் நகர், நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பெரியார் நகர், ஜபார்பாய் தோட்டம் பகுதியில் நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன் தினம், காலை 8.30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று இரவு முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, மூலமந்திர ஹோமம் நடந்தது. 9.30 மணிக்கு, விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், 10:00 மணிக்கு, மூலவருடன் பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., மற்றும் பொது மக்கள், சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.