கிள்ளை: கிள்ளை அருகே ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் நடந்த கலச விளக்கு வேள்வி பூஜையை கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதி காரி ராஜா துவக்கி வைத்தார். மேல்மருவத்துõர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் பிறந்த நாளை முன்னிட்டு கிள்ளை அடுத்த கொத்தங்குடி முத்தையா நகர் சித்தர் சக்தி பீடத்தில் ஆன்மிக ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி நடந்த கலச விளக்கு வேள்வி பூஜையை கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஆன்மிக ஜோதியை மாவட்டத் தலைவர் கிருபா னந்தம் ஏற்றி வைத்தார். சக்தி கொடியை வேள்விக்குழுத் தலைவர் செல்வராஜ் ஏற்றி வைத்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் முருகுவெங்கட்ராமன், சண்முகம், ஜெயபால், பார்த்தசாரதி, சுப்ரமணியன், கணபதி, பாலகுமார், ஞானகுரு, கண்ணன் மற்றும் வேள்விக் குழுவின உட்பட பலர் பங்கேற்றனர்.