பதிவு செய்த நாள்
12
பிப்
2015
11:02
ஆர்.கே.பேட்டை: கொற்றலை ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் சோணாச்சலேஸ்வரர் கோவிலில், வரும் சிவராத்திரி திருநாளில், 24 மணி நேர பஜனை நடைபெற உள்ளது. இதற்காக, ஒன்பது குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளிப்பட்டு அடுத்த, சொரக்காய்பேட்டை சிவகாமி உடனுறை சோணாச்சலேஸ்வரர் கோவிலில், வரும் 17ம் தேதி, சிவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று, காலை 8:00 மணிக்கு, ரிஷப கொடியேற்றி, 10:00 மணிக்கு, பன்னிரு திருமறை வீதியுலா இசை முழக்கத்துடன் நடைபெறுகிறது. மறுநாள் காலை 6:00 மணி வரை, நான்கு கால பூஜை நடத்தப்படுகிறது. முன்னதாக, அதிகாலை 6:00 மணி முதல், 8:00 மணி வரை, திருவாசகம் ஓதப்படும். தொடர்ந்து மறுநாள், காலை 6:00 மணி வரை, பல்வேறு குழுவினர் பஜனை செய்ய உள்ளனர். இதில், முருகா சரணம் பெருமன்றம், பன்னிரு திருமறை வார வழிபாட்டு மன்றம், தணிகை முருகன் திருப்புகழ் சபை, ஸ்ரீராமபிரான் பஜனை குழு, ஸ்ரீவேணுகோபால சுவாமி பஜனை குழு, ஸ்ரீகிருஷ்ண பரமேஸ்வரி கோவில் பஜனை குழு, கோதண்டராமர் பஜனை குழு, தொப்பையம்மன் பஜனை குழு, ஸ்ரீகோதண்டராம பால கானசபா ஆகிய குழுக்கள் இடம் பெற்றுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு, சொரக்காய்பேட்டை நாட்டுப்புற கலைஞர்களின், பக்த மார்க்கண்டேயன் நாடகம் நடைபெறும்.