பதிவு செய்த நாள்
12
பிப்
2015
12:02
தர்மபுரி: தர்மபுரி வெளிப்பேட்டை தெரு, அங்களாம்மன் கோவிலில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மயான கொள்ளை திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. இரவு, ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. இன்று (பிப்.,12) முதல், 16ம் தேதி வரை, நாள் தோறும் காலை, 7 மணிக்கு, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் பூஜைகளும், இரவு, 7 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. தொடர்ந்து, 17ம் தேதி காலை, சிறப்பு அபிஷேகமும், 11 மணிக்கு மேல், 12.30 மணிக்குள், அங்காளம்மன் திருகல்யாணம் நடக்கிறது. மதியம், 1 மணிக்கு, பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. இரவு, 8 மணிக்கு, கல்யாண கோலத்தில், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான, 18ம் தேதி அதிகாலை, ஒரு மணிக்கு, முகவெட்டு நிகழ்ச்சியும், காலை, 10 மணிக்கு அம்மன், பூத வாகனத்தில், மயானம் புறப்படுதலும், 11 மணி முதல், மதியம், 1.45 வரை, பச்சியம்மன் கோவில் வளாகத்தில், மயான கொள்ளை நிகழ்ச்சி நடக்கிறது. அதையடுத்து, 19ம் தேதி அதிகாலை, சாந்தி அபிஷேகமும், 20ம் தேதி காலை, 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு, 7 மணிக்கு பிள்ளை பாவு உற்சவமும், 21ம் தேதி காலை சிறப்பு அபிஷேகமும், 22ம் தேதி இரவு, கொடி இறக்கம் மற்றும் கும்ப பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.