பதிவு செய்த நாள்
13
பிப்
2015
11:02
திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பெருவிழா நேற்று பூத்தமலர் பூ அலங்கார நிகழ்ச்சியுடன் துவங்கியது.
காலை 10 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும், பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படியினரால் அம்மனுக்கு பூ அலங்காரமும் நடந்தது. இன்று காலை 9 மணிக்கு பூச்சொரிதல் விழா, பிப்., 15 இரவு 8 மணிக்கு சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 17 காலை 12 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி, பிப்., 27 பகல் 2:30 மணிக்கு பூக்குழி, இரவு 8 மணிக்கு தேரோட்ட விழா, பிப்., 28 இரவு 10 மணிக்கு தசாவதாரம், மார்ச் 1 காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல், மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 2 இரவு 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், பிப்., 3 மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.