விழுப்புரம்: கொளத்தூர் சிந்தாமணியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் அடுத்த கொளத்தூர் ஏரிக்கரையிலுள்ள, சிந்தாமணியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கரக மற்றும் சகலவித ஹோமங்கள், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.