வடமதுரை : வடமதுரை அருகே கா.புதுப்பட்டியில் கிராம மக்கள் ஆண்டுதோறும் திருவிழா போல சமபந்தி போஜனம் நடத்துகின்றனர்.
மதுரை அழகர்கோவில் அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. 16வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, வடமாநில திருத்தலங்களை தரிசித்துவிட்டு வடமதுரை வந்தார். காணப்பாடி கிராமம் புதுப்பட்டியில் கள்ளிமரத்தடியில் தங்கினார். அவரிடம் ஏதோ மகத்துவம் இருப்பதாக உணர்ந்த மக்கள் அவர் மீது பக்தி கொண்டு, "கள்ளியடி சுவாமிகள் அழைத்தனர். அவரும் கிராம நலனுக்காக நல்ல காரியங்களை செய்தார். 21-1- 1941ல் சமாதி அடைந்த அவரது நினைவாக இங்கு கோயில் கட்டியுள்ள கிராம மக்கள், ஆண்டுதோறும் சமபந்தி போஜனம் நடத்துகின்றனர்.
74-வது ஆண்டாக நேற்று நடந்த சமபந்திக்கு 3000 கிலோ அரிசி, 300 கிலோ புளி, 250 கிலோ நிலக்கடலை பருப்பு பயன்படுத்தி புளிசாதம் தயார் செய்தனர். சுற்றுப்பகுதி, வெளியூர் பக்தர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோயில் முன்பும், தெருக்களிலும் வரிசையாக தரையில் அமர்ந்திருந்தனர். வழிபாடு முடிந்ததும், இளைஞர்கள் ஒருசேர அனைவருக்கும் புளி சாதம் பரிமாறப்பட்டது.