பதிவு செய்த நாள்
13
பிப்
2015
12:02
அவிநாசி : அவிநாசியில், திருநீலகண்ட நாயனாரின் 104வது ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது.அவிநாசி குலாலர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், அம்பிகையுடன் எழுந்தருளிய சந்திரசேகரர் மற்றும் திருநீலகண்டருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடந்தன. முன்னதாக, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கும், 63 நாயன்மார்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவையொட்டி, சிவனடியார்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குலாலர் கல்யாண மண்டப அறக்கட்டளை, மகளிர் அமைப்பு, குலாலர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மேற்கொண்டனர்.முன்னதாக நடந்த குலாலர் மண்டப பொதுக்குழு கூட்டத்தில், கடந்த பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற குலால சமுதாய மாணவ, மாணவியருக்கு, கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அவிநாசி, சேவூர் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த குலால சமுதாயத்தினர் பங்கேற்றனர்.