பதிவு செய்த நாள்
13
பிப்
2015
12:02
திருத்தணி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், வரும், 16ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை, மயான கொள்ளை பிரம்மோற்சவ விழா நடைபெறும்.
திருத்தணி, பழைய பஜார் தெருவில் உள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும், மயான கொள்ளை பிரம்மோற்சவ விழா, வெகு விமரிசையாக நடந்து வருகிறது.
இந்தாண்டிற்கான பிரம்மோற்சவ விழா, வரும், 16ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடக்கிறது.
உற்சவர் அம்மன் தினமும் ஒரு வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதில், முக்கிய நிகழ்வான மயான கொள்ளை, வரும், 18ம் தேதி பிற்பகல் 1:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிங்க வாகனத்தில் வீதியுலா வருவார். தினமும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள், சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும்.