பதிவு செய்த நாள்
13
பிப்
2015
12:02
திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் உள்ள தட்சிணமூர்த்தி கோவில்களில், நேற்று, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர் யோகஞான. தட்சிணாமூர்த்தி கோவிலில் உள்ள, குரு பகவானுக்கு, வியாழக்கிழமை தோறும் நடைபெறும் பாலாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 10:00 மணியளவில், 108 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின் சிறப்பு அலங்காரத்தில், தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியகுப்பம் ஆதிசோமேஸ்வரி உடனுறை ஆதிசோமேஸ்வரர் கோவிலில் உள்ள, திருநீலகண்ட நாயனாருக்கு, நேற்று, குரு பூஜையும், சொற்பொழிவும் நடந்தது.
தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கும், திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கும், நேற்று மாலை, சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.