பதிவு செய்த நாள்
13
பிப்
2015
12:02
ப.வேலூர்:நன்செய்இடையார் ராஜா ஸ்வாமி கோவில், மஹா சிவராத்திரி கொடியேற்று விழா
கோலாகலமாக நடந்தது.ப.வேலூர் தாலுகா, நன்செய்இடையார் ராஜா ஸ்வாமி கோவிலில், மாசி மாத மஹா சிவராத்திரி விழாவிற்காக, கொடியேற்று விழா நேற்று நடந்தது.
தொடர்ந்து, வரும், 17ம் தேதி வரை, சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடக்கிறது. வரும், 18ம் தேதி, மதியம், 1 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து, காவடி எடுத்து வந்து சிறப்பு பூஜை நடக்கும்.தொடர்ந்து, இரவு, 7 மணிக்கு, திருத்தேர்விழா, மயான பூஜையும் நடக்கிறது. 19ம் தேதி காலை, கொடியிறக்கம் மற்றும் பாலிகை வாய்க்காலில் சேர்த்தல் நிகழ்ச்சியில், கரூர், நாமக்கல், சேலம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை, பரம்பரை நிர்வாக அறங்காவலர் குழுவினர், கிருத்திகை கட்டளைக்குழு, கோவில் குடிபாட்டு மக்கள் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.