வெயிலுகந்தம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றம் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2015 12:02
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலுடன் இணைந்த வெயிலு<கந்தம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பிப்.,21 ல் தேரோட்ட்டம் நடக்கவுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகத்துடன் இணைந்த வெயிலுகந்தம்மன் மாசித்திருவிழா ஆண்டு தோறும் நடக்கும். திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதணை நடந்தது. காலை 5.30 மணிக்கு பாலசுப்பிரமணிய வல்லவராயர் கோயில் கொடிமரத்தில் மேள தாளம் முழங்க கொடியினை ஏற்றினார்.
கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாரதணை நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் கோமதி கலந்து கொண்டார். பத்து நாள் திருவிழாவில் தினமும் அம்மன் காலை, மாலை, பல்வேறுவாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின் இரவு கோயில் வந்து சேருவார். பத்தாம் நாளான பிப்., 21 ல், காலை 6 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடிப்பார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஞானசேகரன், தக்கார் கோட்டை மணிகண்டன் ஆகியோர் செய்து வருகின்றனர்.