திருவனந்தபுரம் : பத்மநாபசுவாமி கோயிலின் ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த கோயில் நகைகளில் 266 கிலோ தங்கம் நகைகள் மாயமாகி இருப்பதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 3ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் ரகசிய அறையில் இருந்து 893.44 கிலோ தங்க நகைகள் வெளியே எடுக்கப்பட்டு அவைகள் 82 முறை ஆய்வு செய்யப்பட்டதாகவும், ஆனால் ஆய்விற்கு பின் 627 கிலோ தங்கம் மட்டுமே ரகசிய அறையில் மீண்டும் வைக்கப்பட்டதாகவும், 266 கிலோ தங்கத்தை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. காணாமல் போன நகைகளின் மதிப்பு ரூ.85.90 கோடி ஆகும்.