பதிவு செய்த நாள்
14
பிப்
2015
11:02
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று பூச்சொரியல் நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணிக்கு பூத்தேர் கோயிலில் இருந்து புறப்பட்டு மேற்குரத வீதி, பென்சனர் தெரு, கோபாலசமுத்திரம் கரை, கிழக்கு ரத வீதி வழியாக சன்னதியை அடைந்தது. வழிநெடுகிலும் பூத்தேரில் உதிரிபூக்களை பக்தர்கள் கொட்டி வழிபட்டனர்.
தொடர்ந்து அம்மனுக்கு புஷ்ப அபிஷேகம் நடந்தது. நாளை இரவு 8 மணிக்கு சாட்டுதல் நிகழ்ச்சியும், பிப்., 17 காலை 12 மணிக்குள் கொடியேற்றமும் நடக்கிறது. பிப்., 27 பகல் 2:30 மணிக்கு பூக்குழி, இரவு 8 மணிக்கு தேரோட்ட விழா, பிப்., 28 இரவு 10 மணிக்கு தசாவதாரம், மார்ச் 1 காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல், மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 2 இரவு 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், பிப்., 3 மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.