பழநி தைப்பூசவிழா உண்டியல்மொத்த வசூல் ரூ.3.44 கோடி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2015 11:02
பழநி:தைப்பூச விழா காலகட்டத்தில் பழநிமலைக்கோயில் உண்டியல் மொத்தமாக ரூ.3.44 கோடி வசூலாகியுள்ளது.பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று இரண்டாவது நாளாக உண்டியல் எண்ணிக்கை நடந்தது.
இதில் தங்கம் 174 கிராம், வெள்ளி 8 ஆயிரத்து 446 கிராம், வெளிநாட்டு கரன்சி 133, ரொக்கமாக ஒரு கோடியே 14 லட்சத்தி 11 ஆயிரத்து 742 ரூபாய் கிடைத்துள்ளது. நேற்றுமுன்தினம் கிடைத்த ரூ.2 கோடியே 29 லட்சத்தி 94 ஆயிரத்தி 925 சேர்த்து, தைப்பூச விழா நாட்களில் மொத்தம் ரொக்கம் ரூ.3.44 கோடியும், தங்கம் 839 கிராமும், வெள்ளி 19 ஆயிரத்து 891 கிராமும், வெளிநாட்டு கரன்சி 533 வசூலாகியுள்ளது.