முஷ்ணம் பூவராக சுவாமி கோவில் கருங்கல் தளம் அமைக்க பூமி பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2015 11:02
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் வளாகத்தில் நன்கொடையாளர்கள் உதவியோடு தøரத் தளம் அமைக்கும் பணி துவங்கியது. ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக அரசுமூலம் 69 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தது.
கும்பாபிஷேகத்திற்கு அமைக்கப்பட்ட திருப்பணிக்குழுவின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தநிலையில் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், இந்து சமயஅறநிலையத் துறை ஆணையர் தனபால் கோவிலில் நடந்து வந்த கும்பாபிஷேப் பணிகளைப் பார்வையிட்டு மீதமுள்ளபணிகளை அரசு நிர்வாகமே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகதெரிவித்தார்.
அதன் பின்னர் கோவிலில் மீதமுள்ள பணிகளை முடிக்க நன்கொடையாளர்கள் உதவியோடு தøரத்தளம் அமைத்தல் மற்றும் இதர பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் நேற்று ஆண்டாள் மற்றும் உடையார் சன்னதியில் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில்கருங்கல் தøரத்தளம்அமைக்க பூமி பூஜை போடும் பணிநடந்தது.இதனைத் தொடர்ந்துகோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் நிருபர்களிடம் கூறுகையில், "கோவில்வளாகத்தில் மேலும் பலபணிகள் மீதம் இருக்கிறது.
இதில் 69 லட்சம்ரூபாய் பணிகளை நன்கொடையாளர்கள் மூலம்முடிக்கவும், 23 லட்சம்ரூபாய் மதிப்பிலான பணிகளை முடிக்க அரசுக்குமுன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. 3 மாதத்திற்குள் பணிகளை முடிக்கதிட்டமிடப்பட்டுள்ளது.அதன் பிறகு கும்பாபிஷேகம் தேதி குறிக்கப்படும்என்றார்.