மாசிமுதல் வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2015 12:02
விருத்தாசலம்: மாசி மாத முதல் வெள்ளியையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் சித்திவிநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் நேற்று காலை சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, வெள்ளிக் கவசத்தில் விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் அருள்பாலித்தனர். அதேபோல், சந்தைத்தோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்தி விநாயகர், புத்து மாரியம்மன், அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார த்தில் தீபாராதனை நடந்தது.தென்கோட்டை வீதி மோகாம்பரி அம்மன், ஜங்ஷன் ரோடு ஜெகமுத்து மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.