பதிவு செய்த நாள்
14
பிப்
2015
12:02
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மகா சிவராத்திரி விழா வரும், 17ம் தேதி நடக்கிறது. பொள்ளாச்சி அருகேயுள்ள நாட்டுக்கல்பாளையம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மகா சிவராத்திரி விழா வரும், 17ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி நேற்றிரவு, 10:00 மணிக்கு கோவிலிலிருந்து மேல்மலையனுார் நோக்கி தீர்த்தம் எடுக்க காவடிகள் புறப்படுதல், இன்று மாலை, 5:00 மணிக்கு திருவண்ணாமலை முலைப்பால் தீர்த்தம் முத்தரித்தல், நாளை காலை, 10:30 மணிக்கு மேல் மலையனுாரில் அக்கினித்தீர்த்தம், தாயனுார் தீர்த்தம் முத்தரித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
தொடர்ந்து, 16ம் தேதி இரவு, 10:00 மணிக்கு வேடசந்துார் குடகனாற்றில் தீர்த்தம் முத்தரித்தல், 17ம் தேதி காலை, 10:00 மணிக்கு சண்முக நதியில் தீர்த்தம் முத்தரித்தல், தீர்த்தக்காவடிகள் கோவில் வந்தடைதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு மகா சிவராத்திரி வழிபாடு துவக்கம், 18ம் தேதி காலை, 7:00 மணிக்கு அம்பாள் அலங்காரம், பள்ளயப்பூஜை, அலங்கார ஆராதனை, 19ம் தேதி காலை, 10:00 மணி கும்பாபிேஷக மகா சபை பொதுக்கூட்டமும், மாலை, 4:00 மணிக்கு பூவோடு எடுத்தல், வாகனத்தில் அம்பாள் திருவீதி உலா, ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
பொள்ளாச்சி அருகே கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், 17ம் தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது. விழாவையொட்டி, 17ம் தேதி இரவு, 7:00 மணிக்கு கணபதி ேஹாமம், 8:30 மணிக்கு முதற்கால பூஜை, இரவு, 9:30 மணிக்கு அன்னதானம், 10:30 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
இரவு, 12:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, இரவு, 1:00 மணிக்கு தேவராட்டம், இரவு, 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, இரவு, 3:00 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு, அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை, காலை, 5:00 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன.