அவிநாசி : தேவராயன்பாளையத்தில் பாலமுருகன், மசிரியம்மன் கோவில் மற்றும் அரசப்பம்பாளையம் வேட்டைக்கார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
தேவராயன்பாளையத்தில் பாலவிநாயகர், பாலமுருகன், மசிரியம்மன் கோவில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா, கடந்த 8ல் துவங்கியது. கடந்த 9ல் காலை 9:45க்கு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை ஒட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேவராயன்பாளையம், ராக்கியாபாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
கருவலூர் அருகே அரசப்பம்பாளையத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள, வேட்டைக்கார சுவாமி கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது; பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.