பதிவு செய்த நாள்
14
பிப்
2015
12:02
புதுக்கோட்டை, :புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணியர் ஸ்வாமி கோவில் உண்டியல் திறந்து, காணிக்கையை எண்ணும் பணி மலைக்கோவில் மணி மண்டபத்தில் நடந்தது.புதுக்கோட்டை தேவஸ்தான கோவில்களின் செயல் அலுவலர் கருணாகரன் தலைமையில், உதவி ஆணையர் ஜெயப்பிரியா, சரக ஆய்வாளர் லட்சுமணன் முன்னிலையில், உண்டியல் திறந்து, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
இதில், ஐந்து லட்சத்து, 1,827 ரூபாய் ரொக்கம், தங்கம், 16 கிராம், வெள்ளி, 297 கிராம், சிங்கப்பூர், மலேஷிய கரன்ஸிகள் பக்தர்களால், காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. மேற்பார்வையாளர் மாரிமுத்து, மூக்கன் மற்றும் விளக்கு பூஜை மகளிர் குழுவினர், பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.