புதுச்சேரி: ஆலங்குப்பம் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் நேற்று மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது. ஆலங்குப்பத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில், மயானக்கொள்ளை உற்சவ விழா, கடந்த 13ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி நேற்று 15ம் தேதி காலை 11:00 மணிக்கு, மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது.விரதம் மேற்கொண்ட பக்தர்கள் அரியபுத்திரி, பாண்டியன், அய்யப்பன் ஆகியோருக்கு மிளகாய் சாந்து அபிஷேகம் செய்யப்பட்டது. நாளை (17 ம் தேதி) இரவு 9:00 மணிக்கு, ரணக்களிப்பு, அங்காளம்மன் மின்விளக்கு அலங்காரத்துடன் வீதியுலா நடக்கிறது. 18ம் தேதி மாலை 6:00 மணிக்கு மயானக்கொள்ளை உற்சவம் நடக்கிறது.