பதிவு செய்த நாள்
16
பிப்
2015
11:02
விருத்தாசலம்: விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவம், கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, சித்தி விநாயகர், புத்து மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 8:30 மணிக்கு மணிமுக்தாற்றிலிருந்து Œக்தி கரகம் எடுத்து வந்து, 10:30 மணிக்கு கொடியேற்றம், காப்பு கட்டும் நிகழ்ச்சி, இரவு 8:00 மணிக்கு அ ங்காள பரமேஸ்வரி வீதியுலா நடந்தது. நேற்று இரவு அம்மன் நடராஜர் காட்சி, பூவாலை கப்பரையுடன் வீதியுலா நடந்தது. இன்று (15ம் தேதி) இரவு கெஜலட்சுமி அலங்காரத்தில் முகவோட்டுகப்பரை காட்சி வீதியுலா, நாளை (16ம் தேதி) அம்மன் பள்ளி கொண்ட காட்சி, பஞ்சமுக வீதியுலா, 17ம் ÷ ததி பகல் 12:00 மணிக்கு குறத்தி வேடம் பூண்டு குறி சொல்லும் நிகழ்ச்சி, வானொலி திடலில் இரவு 7:00 மணிக்கு வள்ளால கண்டன் கோட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அம்மன் சுயரூபத்துடன் சென்று நிசானி வயிற்றைக் கிழித்து குடலை பிடுங்கி மாலையாக அணிந்து, குழந்தையை முறத்தில் ஏந்தி வரும் நிகழ்ச்சி, மகிடாசூரன் காட்சி, இரவு 12:00 மணிக்கு மேல் Œக்தி அழைத்தல், அம்மன் சோதனை காட்சி நடக்கிறது. வரும் 18ம் தேதி விடிய ற்காலை அம்மன் ஈஸ்வர ரூபத்துடன் மணிமுக்தாற்றில் விருந்து கொல்லுதல், மாலை 4:00 மணியளவில் நிதி சுடலை சென்று கொள்ளையிடல் நிகழ்ச்சி நடந்தது. 19ம் தேதி அங்காள பரமேஸ்வரி, தாண்டவராய சுவாமி திருக்கல்யாணம், 20ம் தேதி இரவு அம்மன் சோதனை கரகம், 21ம் தேதி ÷ தரோட்டம், 22ம் தேதி மணிமுக்தாற்றிலிருந்து பால்குடம், கரகம், தீச்சட்டி ஏந்தி வருதல், மஞ்சள் நீர் உற்சவம், இரவு பாரதமாதா வீதியுலா, 23ம் தேதி திருவிளக்கு பூஜை நடக்கிறது.