பதிவு செய்த நாள்
16
பிப்
2015
11:02
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நேற்று 20 மணி நேரம் காத்திருந்தனர்.திருமலை ஏழுமலையானை தரிசிக்க வார கடைசி நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அதன்படி, நேற்று முன்தினம் மாலை முதல் பக்தர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
பாதுகாப்பிற்கு அதி நவீன கேமராக்கள்: திருப்பதி பாதுகாப்புக்காக, கூடுதலாக, 600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும், என, ஆந்திர டி.ஜி.பி., ராமுடு தெரிவித்தார்.அவர் கூறியதாவது:திருப்பதியின் பாதுகாப்பிற்காக, நான்கு மாதங்களுக்கு முன், தனியார் நிறுவன உதவியுடன், முக்கிய வளைவுகளில், 184 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனால், திருப்பதி நகரத்தில் பெருமளவில் குற்றங்கள் குறைந்தன. இதையடுத்து, திருப்பதி நகரத்தை சுற்றி கூடுதலாக, 600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், குற்றவாளிகள் பிடிபடுவர். நகரில் குற்றங்கள் நடைபெறுவது தடுக்கப்படும். இதற்காக, வீடியோ அனலடிகல் என்ற புதிய மென்பொருளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.