திருப்பதி: ஆந்திராவில், திருப்பதி அருகே அமைந்துள்ள ஸ்ரீகாளஹஸ்தியில், காளஹஸ்தீஸ்வரருக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பிரம்மோற்சவத்தின், நான்காம் நாளான நேற்று காலை, அன்னப்பறவை வாகனத்தில் சோமஸ்கந்த மூர்த்தியும், யாழி வாகனத்தில் ஞானாம்பிகாவும் மாடவீதியில் வலம் வந்தனர். பின், இரவு காளஹஸ்தீஸ்வர சுவாமி ராவண வாகனத்திலும், ஞானாம்பிகா அம்மையார் மயூரி வாகனத்திலும், மாட வீதியில் வலம் வந்தனர். இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சவ மூர்த்திகளை தரிசித்தனர்.