பதிவு செய்த நாள்
16
பிப்
2015
12:02
பெங்களூரு: வண்ணார்பேட்டை, காசி விஸ்வநாதர் கோவிலில், 128ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா, நாளை நடக்கிறது. இரவில், நான்கு கால அபிஷேகம் செய்யப்படுகிறது.இங்கு, கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜைகள், ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, ஆண்டாள் திருக்கல்யாணம், பொங்கல் விழா, யுகாதி திருவிழா, தமிழ் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. கார்த்திகை தீப விழாவில் சிவன்-, பார்வதி ரத உற்சவம், வைகுண்ட ஏகாதசியன்று தேர் பவனி போன்றவை நடக்கின்றன. வரும், 17ம் தேதி சிவராத்திரியையொட்டி, காலையில் ருத்ராபிஷேகம், அடியார்களின் பஜனை வழிபாடு, மகா மங்களார்த்திக்கு பின் பிரசாதம் வழங்கப்படும். மாலையில், குத்துவிளக்கேற்றுதல், பரதநாட்டியம், ஹலசூரு விவேகானந்தர் சாலை ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமிஜி தத்துவரூபாநந்தா ஆன்மிக சொற்பொழிவு, இரவில், பக்தி இன்னிசை, நள்ளிரவில் சிவ புராணம் என்ற தலைப்பில், பக்தி சொற்பொழிவு நடக்கிறது. அன்றிரவு, 10:00, 12:00, அதிகாலை 2:00, 4:00 மணிக்கு நான்கு கால அபிஷேகம் நடக்கிறது. 18ம் தேதி காலையில் மங்களார்த்தி, பகலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் தலைவர் முனிசாமி, செயல் தலைவர் சுந்தர்ராஜ், செயலர் கிருபானந்தன், உப தலைவர்கள் மோகன், தயானந்தன், இணை செயலர் சந்திரசேகர், உப செயலர் மகேந்திரன், பொருளாளர் கணேஷ் மற்றும் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.