பரமக்குடி : பரமக்குடி குருநாதசுவாமி வேலங் குடி கருப்பணசுவாமி கோயிலில் 63 ம் ஆண்டு மகாசிவராத்திரி மற்றும் பாரி வேட்டைத் திருவிழா நேற்று காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை குருநாத, கருப்பணசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, அனைத்து பரிவார தெய்வங் களுக்கும் தங்கம், வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. கருப்பணசுவாமி தங்க கிளியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு காப்புக்கட்டி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகமும், நாளை (பிப்.,17) மகாசிவராத்திரி விழாவும், தொடர்ந்து பிப்., 19 காலை 9 மணிக்கு பாரிவேட்டை விழா நடக்கிறது. மறுநாள் தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது. அதேபோல், பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சன்னதியில் உள்ள கருப்பணசுவாமிக்கு நாளை மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.