புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், நாளை (17ம் தேதி) மகா சிவராத்திரி விழாவையொட்டி, இரவு முழுவதும் சிறப்பு பூஜை நடக்கிறது. கோவிலில், மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜை துவங்குகிறது. தொடர்ந்து, 9:00 முதல் 10:00 வரையும், நள்ளிரவு 1:00 மணி முதல் 2:30 மணி வரையும், 18ம் தேதி அதிகாலை 4:30 முதல் 6:00 வரை நான்கு கால பூஜை நடக்கிறது. அபிஷேகத்திற்கு பொருட்கள் கொடுக்க விரும்பும் பக்தர்கள், 17ம் தேதி மாலை 4:00 மணிக்குள் கோவிலில் கொடுக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.