பதிவு செய்த நாள்
16
பிப்
2015
12:02
நாமக்கல்:தர்ம ரஷண ஸமிதி சார்பில், நாமக்கல்லில் நாளை (பிப்., 17), மஹா சிவராத்திரி விழா, கோலாகலமாக நடக்கிறது.நாமக்கல் மாவட்ட தர்ம ரஷண ஸமிதி சார்பில், நாமக்கல் அடுத்த முதலைப்பட்டியில் உள்ள செல்வம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மூன்றாமாண்டு மஹா சிவராத்திரி விழா, நாளை (பிப்., 17) நடக்கிறது. அப்போது, 1,008 சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்து, சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடக்கும்.தர்ம ரஷண ஸமிதியின், ஓங்காரானந்தா தலைமை வகிக்கிறார். மாவட்ட தலைவர் கோபு மாதவன் முன்னிலை வகிக்கிறார். பூஜையில் பங்கேற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், தலா ஒரு சிவலிங்கம் கொடுக்கப்பட்டு, அவர்கள் கையினாலேயே, சிவலிங்க பூஜை செய்யலாம்.மாவட்ட பொறுப்பாளர்கள், துணைத் தலைவர்கள் நடேசன், செல்லமுத்து, பொதுச்செயலாளர் மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் கணேசன், கேசவன், சக்திவேல், வரதராஜன், அமைப்பாளர் நல்லகணேசன் உள்ளிட்டோர், நிகழ்ச்சிக்களுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.