பதிவு செய்த நாள்
16
பிப்
2015
12:02
ஊட்டி : ஊட்டி விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், நாளை சிவராத்திரி பெரு விழா கொண்டாடப்படுகிறது. ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், நேற்று மாலை, 3:00 மணிக்கு திருவிளக்கு பூஜையுடன் சிவராத்திரி விழா துவங்கியது. விழாவில், காந்தல் ஆதிபராசக்தி மகளிர் குழுவினர், ஓம்தி வார வழிபாட்டு மன்றத்தினர், காசி விசாலாட்சியம்பாள் மகளிர் குழுவினர் பங்கேற்று வழிபாடுகளை நடத்தினர்.இன்று மாலை, 3:00 மணிக்கு மகாபிரதோஷம் நடக்கிறது. நாளை காலை, 7:00 மணிக்கு கலச பூஜை, காலை, 11:00 மணிக்கு உச்சிகால பூஜை, காலை, 11:30 மணிக்கு அன்னதானம், மதியம், 2:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா யாக பூஜை, மாலை, 3:00 மணிக்கு மகா அபிஷேகம் ஆகியவை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு சுவாமி கோவில் வலம் வரும் நிகழ்ச்சி, மாலை, 5:30 மணிக்கு பரதநாட்டியம், இரவு, 7:00 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம், இரவு, 10:00 மணிக்கு குழலிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கின்றன.விழா ஏற்பாடுகளை காசி விஸ்வநாத சுவாமி கோவில் முன்னேற்ற சங்கத்தினர், காசி விஸ்வநாத சுவாமி கோவில் சேவா சங்கத்தினர், ராயபோயர் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
* ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் உள்ள பவானீஸ்வரர் கோவிலில், நாளை மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜை, சிறப்பு அபிஷேகம், இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. நள்ளிரவு 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அபிஷேகம், 18ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு மகா சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. கோடி சிவநாம அர்ச்சனைநீலகிரி மாவட்ட தர்ம ரக்ஷண சமிதி சார்பில், ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தேவாங்கர் மண்டபத்தில் நாளை மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை ஒரு கோடி சிவநாம அர்ச்சனை, 1008 சிவபெருமான் படங்கள் வினியோகம் நடக்கிறது. விழாவுக்கு, சமிதியின் பொது செயலாளர் குமார் ஆன்மிக சொற்பொழிவாற்றுகிறார். ஏற்பாடுகளை தர்ம ரக்ஷ சமிதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.