மண்டைக்காடு பகவதி அம்மன்கோயிலில் கேரள பக்தர்கள் வருகை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2015 12:02
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களின் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். இங்கு கேரள பெண்கள் இருமுடி கட்டு ஏந்தி கடல் குளித்து வழிபடுவதால் இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாசி கொடை விழா வரும் மார்ச் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது. விழா தொடங்க இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில் கேரள பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள் கடல் குளித்து அம்மனுக்கு பொங்கல் இட்டு வழிபாடு நடத்துகின்றனர். இவர்களுடன் உள்ளூர் பக்தர்களும் வருவதால் கடற்கரையிலும், கோயிலிலம் கூட்டம் களை கட்டுகிறது.