பதிவு செய்த நாள்
16
பிப்
2015
12:02
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு, கர்நாடகா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் தமிழக முதல்வர் பொறுப்பில் அமர வேண்டும், என்று கட்சியினர் பலர் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை, பூஜைகள் செய்து வருகிறார். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது, அம்மா என்ற வடிவில் அகல்விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள காலபைரவர் உட்பட பல்வேறு ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.