பதிவு செய்த நாள்
16
பிப்
2015
12:02
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, புதுநடுவலூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமஹா கணபதி, ஐய்யனார், பெரியசாமி, பாப்பாத்தி அம்மன், வெள்ளையம்மா, பெரியம்மா சமேதஸ்ரீ களைபடைத்த அம்மன் மற்றும் பரிவார ஆலய வருடாபிஷேக விழா நடந்தது.புதுநடுவலூர் கிராமத்தில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கோயிலுக்கான மகா கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு பிப்., 9ம் தேதி நடந்தது. இதையொட்டி, கோயிலின் வருடாபிஷேக விழா தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. சேலம் மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் நடேசன் முன்னிலையில் நடத்தப்பட்ட வருடாபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜைகளை, செட்டிக்குளம் சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். இதில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், ஊராட்சி துணை தலைவர் செல்வராஜ் மற்றும் பெரம்பலூர், புதுநடுவலூர், மேட்டூர், நொச்சியம், அரணாரை, ரெங்கநாதபுரம், சிறுவாச்சூர், கல்பாடி, திம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.