கருமத்தம்பட்டி : மோளகாளிபாளையம் பண்ணாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கருமத்தம்பட்டி அடுத்த மோளகாளிபாளையத்தில் உள்ள விநாயகர் மற்றும் பண்ணாரியம்மன் கோவில் பழமையானது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று முன்தினம், கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. முதல்கால யாக பூஜை, பூர்ணாகுதி முடிந்து, சுவாமிக்கு அஷ்டபந்தன மருந்திடப்பட்டது.நேற்று காலை இரண் டாம் கால யாக பூஜைக்குபின், புனிதநீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் விநாயகர் மற்றும் பண்ணாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தச தானம், தரிசனம் மற்றும் மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.