கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2015 11:02
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை சிறப்பு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. 3:30 மணிக்கு மேல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் உற்சவர் சிலைகள் சிறப்பாக அலங்கரித்து லட்சார்ச்சனை நடந்தது. தேசிக பட்டர் வைபவத்தினை நடத்தினார்.